Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/ பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மாம்பாக்கத்தில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டு வருகிறது.

மதுராந்தகத்திலிருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு, செய்யூர் பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இதில், மாம்பாக்கம் பகுதியில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்து இருந்ததால், பயணியர் கால்கடுக்க நின்று, பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.

பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, மதுராந்தகம் நகராட்சி பொது நிதியின் வாயிலாக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us