PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பார்வைக்கு வந்த மூழ்கிய கப்பல்
'டைட்டானிக் ஆப் ஆல்ப்ஸ்' என அழைக்கப்படும் 'சேன்டிஸ்' கப்பல் 'கான்ஸ்டன்ஸ்' ஏரியில் மக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. ஒரே நேரத்தில் 400 பேர் பயணிக்கலாம். 40 ஆண்டு சேவைக்குப்பின் இக்கப்பல் பயணிக்க தகுதியில்லாததாலும், உடைத்தால் அதிக செலவாகும் என்பதாலும் ஏரியின் மையப்பகுதிக்கு கொண்டு வந்து மூழ்கடிக்கப்பட்டது. பின் 2013ல் இக்கப்பல் மூழ்கியிருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். தற்போது 90 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் பார்வைக்காக அக்கப்பலை தண்ணீருக்கு மேலே உயர்த்தியுள்ளனர். இந்த ஏரி சுவிட்சர்லாந்து - ஜெர்மனி எல்லையில் உள்ளது.
தகவல் சுரங்கம்
டார்வின் தினம்
அறிவியல் துறைக்கு சார்லஸ் டார்வினின் பங்களிப்பை கவுரவிக்கவும், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் விஞ்ஞானி டார்வின் பிறந்தநாள் (பிப். 12) 'டார்வின் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 167 நாடுகளின் 400 விஞ்ஞானிகள் 1909ல் லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சந்தித்தபோது, இத்தினம் உருவாக்கப்பட்டது. 1809 பிப். 12ல் பிரிட்டனில் பிறந்தார். தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை 1859ல் 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலாக வெளியிட்டார். 'குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவானான்' என்பதை உலகிற்கு தெரிவித்தார்.