Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தப்பி ஓட நினைக்காதே

தப்பி ஓட நினைக்காதே

தப்பி ஓட நினைக்காதே

தப்பி ஓட நினைக்காதே

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை நிறைந்த மூளை, வேலைசெய்யும் கைகள் மூன்றும் நமக்குத் தேவை.

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.

* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்க வேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.

* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.

* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.

* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us