Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/நன்றி மறப்பது நன்றன்று

நன்றி மறப்பது நன்றன்று

நன்றி மறப்பது நன்றன்று

நன்றி மறப்பது நன்றன்று

ADDED : டிச 31, 2011 12:12 PM


Google News
Latest Tamil News
* காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயனை எதிர்பார்க்காமல் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.

* இல்லறத்தில் சிறந்து வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.

* அன்பைப் பூட்டி வைக்க முடியாது. வேண்டப்பட்டவர்கள் துன்பமடைந்தால், அது தானே வெளிப்பட்டுவிடும்.

* தூய்மையான நிலை என்பது ஆசையை வெறுத்த நிலையாகும். இறைவனை விரும்புவதால் மட்டுமே இந்தநிலை கிடைக்கும்.

* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், தீமையை உடனே மறந்துவிட வேண்டும்.

* மனதை அதன் வழியில் செல்லவிடாமல், தீமையில்இருந்து அகற்றி நல்ல வழியில் செல்லவிட வேண்டும்.

* அறிவுடையவர்கள் மட்டுமே எதிர்கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உணரும் சக்தி பெறுகின்றனர்.

* அழிவுவராமல் காக்கும் கருவி அறிவு. இது பகையால் எதிர்ப்பவர்க்கும் அழிக்க இயலாத உள் அரண் போன்றதாகும்.

* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் நான்கும் தம்மைச் சேராதபடி வாழ்வு நடத்துதலே தர்மம்.

- திருவள்ளுவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us