Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/மலர் போல மகிழ்ச்சிப்படுத்து!

மலர் போல மகிழ்ச்சிப்படுத்து!

மலர் போல மகிழ்ச்சிப்படுத்து!

மலர் போல மகிழ்ச்சிப்படுத்து!

ADDED : ஜூன் 28, 2010 08:06 PM


Google News
Latest Tamil News
* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும், உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே இறையருள் முழுமையாக இருக்கும்.

* முதலில் உங்களுக்குள் இருக்கும் பொய்மைகளை அகற்றுங்கள். அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்றுங்கள். அப்போது தான் ஒளி பெற்று தெய்வசக்தியை உங்களுக்குள் உணர முடியும்.

* எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

* ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.

* பலன் கருதாமல் சேவை செய்யுங்கள்.அதுவே உத்தம குணம். ஆனால், பொருளாதாரத்தில் உயர உயர

மனிதர்களின் குணங்கள் மறைந்து விடுகின்றன. சுயநலம் கொண்டு லாபநோக்கில் செயல்படத் துவங்குகிறார்கள்.

* மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.

-ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us