Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/அற்பமானது என்று எதுவுமில்லை

அற்பமானது என்று எதுவுமில்லை

அற்பமானது என்று எதுவுமில்லை

அற்பமானது என்று எதுவுமில்லை

ADDED : நவ 02, 2010 08:11 PM


Google News
Latest Tamil News
* நமது விவேகமுள்ள மிகவும் சிறந்த நண்பன் இறைவன். நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறிவான்.

* நீ கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று நீ விரும்பலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான கோரிக்கையாகும். கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன்.

* கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை

ஏற்றுக் கொள். நாயகனாகிய இறைவனின் முகமுடியாக நீ இருந்து உனக்குள் அவனை இயங்க விடு.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று

எதுவுமில்லை. உன் கண்களில் அற்பமானது என்று

எதுவும் இருக்க வேண்டாம்.

* உண்மையுணர்வு என்னும் ஒளியில் நிலைத்து

நில்லுங்கள். அதில் தான் மகிழ்ச்சியும் அமைதியும்

இருக்கின்றன.

* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்யதுவிடக்

கூடாது. அதிலிருந்து விலகி நின்று, அதன் காரணத்தைக் கண்டு அதை நீங்கள் விலக்க வேண்டும்.

-அரவிந்தர் 




      Our Apps Available On




      Dinamalar

      Follow us