Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கூட்டு வழிபாடு செய்யுங்கள்

கூட்டு வழிபாடு செய்யுங்கள்

கூட்டு வழிபாடு செய்யுங்கள்

கூட்டு வழிபாடு செய்யுங்கள்

ADDED : ஏப் 09, 2013 10:04 AM


Google News
Latest Tamil News
* உண்மை என்பது ஒன்றே ஒன்று மட்டுமே. இரண்டு என்றால் அது உண்மையில்லை என்று தான் பொருள்.

* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் நமக்குள்ளும் இருக்கிறார் என்பதும் உண்மையே. அப்படி இருக்கும்போது நாம் ஏன் வெளியில் அவரைத் தேடி அலைய வேண்டும்?

* குளத்தில் நிலவின் பிம்பம் தெரிவது போல, இதயக்குளத்தில் கடவுளின் பிம்பத்தைக் காண முடியும்.

* பக்தன் கடவுளின் அன்பைப் பெற ஏங்கித் திரிவது போல, கடவுளும் பக்தனின் அன்புக்காக ஏங்குகிறார்.

* நீங்கள் யார் என்று மட்டும் சிந்தியுங்கள். மற்றவர்கள் யார் என்றும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் சிந்திப்பதால் பயனில்லை.

* பக்தர்கள் மன ஒருமையுடன் வழிபடும்போது கடவுளின் இதயம் உருகி விடும். அதனால், கூட்டு வழிபாட்டில் விருப்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

* வேலையைச் செய்யுங்கள். பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். உங்களை கடவுளிடம் அர்ப்பணித்து விடுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us