ADDED : ஏப் 19, 2013 05:04 PM

* குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பகுதியே. ஆன்மிகம், ஒழுக்கம், பண்பாடு போன்ற நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.
* எந்த விஷயத்திலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.
* அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்து வைப்பதில்லை. அதுபோல, தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாகலாம். எளிய உணவு, அளவான பேச்சு இரண்டையும் கடைபிடித்தால் எல்லா நலங்களும் கைகூடும்.
* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படுத்துங்கள்.
* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியம். குறித்தநேரத்தில் குறித்த வேலையைச் செய்து முடியுங்கள். ஒவ்வொரு விநாடியும் நல்ல நேரமாகட்டும்.
- சாய்பாபா
* எந்த விஷயத்திலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.
* அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்து வைப்பதில்லை. அதுபோல, தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாகலாம். எளிய உணவு, அளவான பேச்சு இரண்டையும் கடைபிடித்தால் எல்லா நலங்களும் கைகூடும்.
* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படுத்துங்கள்.
* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியம். குறித்தநேரத்தில் குறித்த வேலையைச் செய்து முடியுங்கள். ஒவ்வொரு விநாடியும் நல்ல நேரமாகட்டும்.
- சாய்பாபா