Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பிறருக்காக பிரார்த்தியுங்கள்

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
* தெய்வ சிந்தனையுடன் தளராத நம்பிக்கையுடன், வேறுபாட்டு உணர்வை நீக்கி, அனைவரும் தெய்வத்தின் உருவங்களாக உணர்ந்து வாழுங்கள்.

* அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என கருதுங்கள். வெறுப்பை விட்டு, தீங்கு இழைக்காத நல்லுணர்வை வளருங்கள்.

* நல்ல எண்ணங்களை நினையுங்கள், நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள், நல்ல செய்கைகளில் ஈடுபடுங்கள், பிறருக்கு உதவுங்கள்.

* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதனின் பொறுப்பு. அதற்கு பலன் அருள்வது ஆண்டவனின் பொறுப்பு.

* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது, நெஞ்சில்இருந்து வரவேண்டும். அதைத் தனக்காகச் செய்யக் கூடாது, பிறருக்காகச் செய்ய வேண்டும்.

* மேகங்கள் கலையும் வரை பொறுத்திருந்தால் தான் சூரிய ஒளியைக்காணமுடியும். அதுபோல் பொறுமையாகப் பிரார்த்தனை செய்தால் தான் இறையருள் கிடைக்கும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us