Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இனிய ஆரஞ்சு சுளை வேண்டுமா

இனிய ஆரஞ்சு சுளை வேண்டுமா

இனிய ஆரஞ்சு சுளை வேண்டுமா

இனிய ஆரஞ்சு சுளை வேண்டுமா

ADDED : மார் 25, 2012 10:03 AM


Google News
Latest Tamil News
* ஆடிப்பாடுவதற்காக மனிதன் பூமிக்கு வரவில்லை. அன்பை பயிற்சி செய்து, இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறான்.

* நெஞ்சில் பயமற்ற முயற்சி இருக்கட்டும். செயலில் உண்மை துலங்கட்டும். இவர்களுக்கு இறையருள் காத்திருக்கிறது.

* மனம் என்ற வயலில், 'அமைதி' என்ற விளைச்சலைப் பெற வேண்டுமானால், தற்பெருமை, பொறாமை ஆகிய களைகளுக்கு இடம் தரக்கூடாது.

* தன்னை உணர்ந்தவனே, இறையருளைப் பெறும் தகுதி பெற்றவன். புறவுலக நிகழ்ச்சிகளால் அவன் பாதிக்கப்படுவதில்லை.

* துன்பம் இல்லாமல் இன்பத்தைப் பெற முடியாது. துன்பத்தைக் கடந்தால் இன்பம் என்னும் இனிய ஆரஞ்சு சுளை கிடைக்கும்.

* சத்தியம், நம் உயிரையும் உள்ளத்தையும் வளர்க்கும் பசும்பாலைப் போல புனிதமானது. பொய்யோ, உயிரையும், உணர்வையும் கெடுக்கும் மதுவைப்போல தீங்கானது.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us