Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தேவை சேவை மனப்பான்மை

தேவை சேவை மனப்பான்மை

தேவை சேவை மனப்பான்மை

தேவை சேவை மனப்பான்மை

ADDED : ஜூலை 31, 2012 10:07 AM


Google News
Latest Tamil News
* மனித மனங்களில் உறுதியும், நேர்மையும் இருந்து விட்டால் உலகில் அமைதி தழைக்கத் தொடங்கிவிடும்.

* கடவுளை வணங்கினால் மட்டும் போதாது. அவருடைய தெய்வீக இயல்பை நாமும் பெற வேண்டும். அதுவே உயர்ந்த வழிபாடாகும்.

* மன வீட்டைப் பூட்டியிருக்கும் மோகம், கோபம் என்னும் இரட்டைக் கதவுகளைத் திறந்திடுங்கள். பேராசை என்னும் தாழ்ப்பாளை நீக்குங்கள். அப்போது ஆன்மிகக்காற்று வீசுவதைக் காண்பீர்கள்.

* மனதை அன்பினால் நிரப்புங்கள். நேர்மையான சிந்தனையைப் பரவ விடுங்கள். நல்ல விஷயங்களிலும், உயர்ந்த செயல்களிலும் எப்போதும் ஈடுபடுங்கள்.

* சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்ய ஆர்வம் காட்டுங்கள். கடவுளின் கருணையை பெற இதுவே வழி.

* ஒவ்வொரு எண்ணமும் கடவுளை அலங்கரிக்கும் மலராக விளங்கட்டும். பேசும் ஒவ்வொரு சொல்லும் அன்பெனும் இனிய சாற்றினைத் தாங்கி நிற்கட்டும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us