Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடவுள் அளித்த பரிசு

கடவுள் அளித்த பரிசு

கடவுள் அளித்த பரிசு

கடவுள் அளித்த பரிசு

ADDED : ஆக 05, 2012 10:08 AM


Google News
Latest Tamil News
* பெற்றோர்கள் நல்ல பண்புகளைக் கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

* இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் சோம்பித் திரிவது கூடாது. இளமைக்காலம் மிக அரிய பருவம். அதில் ஒவ்வொரு கணப்பொழுதும் கடவுள் அளித்த பரிசு.

* துயரத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை. அவர்களுக்குச் செய்யும் தொண்டினை கடவுள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.

* அன்றாட வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள். ஆடம்பரத்தில் சிறிதும் நாட்டம் செலுத்தாதீர்கள்.

* இந்த உலகம் உங்களுடைய சேவகனாக இருக்க விரும்பினால், நீங்கள் அழிவின் பாதையில் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள் என்பது பொருள்.

* உங்களுடைய கண்களில் தெய்வ அம்சம் நிறைந்துஇருக்கட்டும். அப்போது அனைத்தையும் தெய்வீகமாகக் காணும் மனத் தெளிவு உண்டாகும்.

* சோதனைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே ஒருவருக்கு தன்னம்பிக்கையை அளித்து வளர்ச்சிக்கு துணை நிற்கிறது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us