Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வந்தால் வரட்டும் சோதனை!

வந்தால் வரட்டும் சோதனை!

வந்தால் வரட்டும் சோதனை!

வந்தால் வரட்டும் சோதனை!

ADDED : பிப் 06, 2012 10:02 AM


Google News
Latest Tamil News
* இறைவனை நம்புபவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்வதில்லை. இந்த நம்பிக்கையே வாழ்விற்கு உறுதி தரும்.

* இறைவன் விதிக்கும் கட்டளைக்கு எத்தனையோ அர்த்தம் உண்டு. அவை நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அதைப் போற்றி வாழ்வதே நமக்கு நன்மை தரும்.

* இறைவனின் சோதனை மிக அவசியம். அதை சாதனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேதனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

* உடம்பைத் திருத்தி, உள்ளத்தைப் பண்படுத்தி, வாழும் விதத்தை சீரமைத்து கொண்டால் நாம் அனைவரும் நல்லவர்களாக வாழ முடியும்.

* அனைத்தும் இறைவன் கொடுத்தவை, அவனுக்கே உரியவை என்று நினைத்துவிட்டால் நம்முடைய நினைவிலும், செயலிலும் தூய்மை இருக்கும்.

* உங்களுக்கு ஏற்ற முறையில் பக்தியில் ஈடுபடுங்கள். இறைவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுபட வேண்டும். சிந்தனையும் செயலும் மனச்சாட்சிக்கு இணங்கி இருக்க வேண்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us