Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனத்தூய்மை பெறும் வழி

மனத்தூய்மை பெறும் வழி

மனத்தூய்மை பெறும் வழி

மனத்தூய்மை பெறும் வழி

ADDED : பிப் 01, 2011 08:02 PM


Google News
Latest Tamil News
* மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப் படுத்துகிறோம். அன்னை ஒரு குழந்தையை இப்பூமியில் ஈன்றெடுக்கிறாள். தாயே அப்பிள்ளைக்குத் தந்தையைக் காட்டுகிறாள். தந்தை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். குருவோ கடவுளை அடைய வழிகாட்டுகிறார்.

* உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது அடிப்படைக் கடமை. அதனாலேயே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லி வைத்தனர். மோசமான உடல் நிலையுள்ள ஒருவனால் உலகில் எதனையும் அனுபவிக்க முடியாது.

* ஒருவன் நமக்குச் செய்த தீமையையோ, பிறருக்கு நீங்கள் செய்த நன்மையையோ இதயத்தில் இருந்து அகற்றிவிடுங்கள். இவற்றை மறந்துவிடுவதால் நம் மனம் தூய்மை பெற்றுவிடும்.

* நாம் ஏதோ காரணத்தால் கடவுளை விட்டு பிரிந்து விட்டோம். மீண்டும் கடவுளை அடைந்தால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

* தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் உயர்வகுப்பிற்குச் செல்லமுடியும். அதுபோல ஆன்மிகத்தில் நாம் தகுதி பெற்றிருக்கிறோமா என்பதை ஆண்டவன் பலவிதமான முறைகளில் நம்மைச் சோதிக்கிறார்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us