Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/கடவுள் எதை விரும்புகிறார்?

கடவுள் எதை விரும்புகிறார்?

கடவுள் எதை விரும்புகிறார்?

கடவுள் எதை விரும்புகிறார்?

ADDED : டிச 20, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* இறைவனை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால், ஆன்மிகத் துறையில் நாம் விரும்பும் அனைத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.

* முதுமையில் துன்பம் வந்த பிறகு இறைவனை தேடுவதைவிட, இளமையில் பக்தி செலுத்துவதே புத்திசாலித்தனம்.

* எவ்வளவு வேலை இருந்தாலும், பிரார்த்தனைக்கும், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.

* உண்மை அன்பை கடவுள் விரும்புகிறார். வெறும் வார்த்தைகள் இறைவனைத் தொடாது. இயலாதவர்களுக்கு சேவை செய்வதும் அன்பில் ஒரு வகையே.

* மனம் ஒருமுகப்படுவதற்காக இறைவனுக்கு பூஜை செய். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜெபம் செய்ய உன்னால் முடிந்தால், அது உனக்கு நன்மை தரும்.

* பகலும், இரவும் சேரும் மாலை நேரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. அந்தப் புனிதமான நேரத்தில் மனம் தூய்மையாக இருப்பதால் இறைவழிபாட்டில் சுலபமாக ஈடுபடும்.

* தூய்மையான மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் தூய்மையாகவே காண்கின்றனர்.

- சாரதாதேவியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us