Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

ADDED : ஜூன் 06, 2010 04:06 PM


Google News
Latest Tamil News
* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும் அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!

இறைவன் கூறுகின்றான்: (நபியே கூறுவீராக!)

* வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய இறைவனுக்கே எல்லாப் புகழும்! (திருக்குர்ஆன் 45: 36)

* கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான்.

* உங்களின் இந்த சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள்.

* (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.

* (இந்தக் குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான்.

- நபிகள் நாயகம்(ஸல்) (நூல்: பைஹகி)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us