Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/தீமை நன்மையாக என்ன வழி?

தீமை நன்மையாக என்ன வழி?

தீமை நன்மையாக என்ன வழி?

தீமை நன்மையாக என்ன வழி?

ADDED : மே 26, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். ''ஜகாத்'' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.

* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.

* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும் ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.

* எவர் பாவ மன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத் தொடங்கி விட்டிருக்கிறாரோ, அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மைகளாக மாற்றிவிடுவான்.

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.

* எந்தப்பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப் பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us