Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/முயற்சி நல்ல கூலி தரும்

முயற்சி நல்ல கூலி தரும்

முயற்சி நல்ல கூலி தரும்

முயற்சி நல்ல கூலி தரும்

ADDED : மே 31, 2011 10:05 AM


Google News
Latest Tamil News
* இறைவன் மக்களில் ஒரு கூட்டத்தினரை கொண்டு, மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால் உலகம் சீர்கெட்டிருக்கும். ஆயினும், நிச்சயமாக இறைவன் அகிலத்தார் மீது பெரும் கருணையுடையோனாக இருக்கின்றான்.

* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது.

அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.

* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும் ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.

* மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை, இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.

* ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us