Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/உயர்ந்த செயல்

உயர்ந்த செயல்

உயர்ந்த செயல்

உயர்ந்த செயல்

ADDED : ஜன 26, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டு. * இறைவன் கூறுகிறான்: அந்தச் சமூகத்தவரில் சிலரை நாம் உண்டாக்கினோம். அவர்கள் பொறுமையை மேற்கொண்டு எமது கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழி அடைந்தார்கள். * இஸ்ரவேலர்கள் பொறுமையைக் கடைபிடித்ததால் நன்மை கிடைத்தது. * இந்த வழியில் நடப்போருக்கு அவர்கள் செய்ததைவிட அதிக நன்மை அளிக்கப்படும். * இவர்களுக்கு அளவற்ற ஊதியம் உண்டு. * பொறுமை ஈமானில் பாதி. அவன் அருட்கொடைகளை வழங்கியிருக்கலாம். ஆனால் அவற்றில் அரிதாகக் கிடைப்பது இரண்டு. 1. திடநம்பிக்கை 2. பொறுமை. * பொறுமைசாலிகள் தங்களுக்குத் தவறிப்போன இரவு வணக்கத்தைப் பற்றியோ, நோன்புகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. பொறுமையோடு செயலாற்றுவது மற்ற எல்லா செயல்களையும் விட சிறந்ததாகும். ஈமான் என்றாலே பொறுமையும் வீரமும்தான். * அவன் கொடுத்திருக்கும் நன்மையை வரம்பிட்டுக் கூறமுடியாது. அவன் ஒருவருக்கு ஏதேனும் பேரருள் ஒன்றை கொடுத்திருக்கலாம். பின்னர் அதைப் பறித்துக் கொண்டு அதற்குப் பதிலாக வேறொரு அருளை அளிக்கலாம். அப்படி அளித்தால் 'பொறுமையாக இருந்தால் அது முந்திய யாவற்றையும் விட உயர்ந்தது' ஆகும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us