Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/அனைவரிடமும் அன்பாயிருங்கள்!

அனைவரிடமும் அன்பாயிருங்கள்!

அனைவரிடமும் அன்பாயிருங்கள்!

அனைவரிடமும் அன்பாயிருங்கள்!

ADDED : ஜூலை 11, 2010 10:07 PM


Google News
Latest Tamil News
நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்:

* ''படைப்புகள் அனைத்தும்

இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்''

(நூல்: பைஹகி)

* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால்

விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.

(நூல்: திர்மிதி)

* நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.

* நபித்தோழர்கள்: நாங்கள் ஒவ்வொருவரும் அன்பு செலுத்துபவர்களாகவே உள்ளோம்.

* நபிகள் நாயகம்(ஸல்): அன்பு என்பது உங்கள்

உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.

(நூல்: பத்ஹுல் பாரி)

* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்

படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.

(நூல்: பைஹகி)

* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத

வரையில் நீங்கள் உண்மையுள்ள இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது.

(நூல்: முஸ்னத் அஹமத்)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us