Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இருப்பதில் திருப்தியாக இரு!

இருப்பதில் திருப்தியாக இரு!

இருப்பதில் திருப்தியாக இரு!

இருப்பதில் திருப்தியாக இரு!

ADDED : ஜூன் 03, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இருவிஷயங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.பொருளின் மீது பேராசை, வயதின் மீது பேராசை.

* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.

* இருவிஷயங்கள் ஒருவனிடமிருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை மிக்கவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான்.

* உலக வசதிகளைப் பொறுத்தவரையில் தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள். அதுவே என்றும் அழியாத செல்வமாகும்.

* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்.

(வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us