Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைநம்பிக்கையின் பகுதிகள்

இறைநம்பிக்கையின் பகுதிகள்

இறைநம்பிக்கையின் பகுதிகள்

இறைநம்பிக்கையின் பகுதிகள்

ADDED : மே 01, 2012 10:05 AM


Google News
Latest Tamil News
* இறைவன் கூறுகின்றான்: எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலைநாட்டி ஜகாத்தும்(தர்மமும்) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

* நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும், பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கி விடுவோமா என்ன? இறை அச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா என்ன?

* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை, ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.

* எவருடைய அண்டை வீட்டார் அவரது துன்பங்களை விட்டுப் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் இறைநம்பிக்கை இல்லாதவர்.

* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.

(வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us