Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/மென்மையாகப் பேசுவோமே!

மென்மையாகப் பேசுவோமே!

மென்மையாகப் பேசுவோமே!

மென்மையாகப் பேசுவோமே!

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம்,சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.

* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாமல் வாழும் துறவியைக் காட்டிலும் மேன்மையானவன்.

* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவது உறுதி.

* முன்யோசனையுடன் இதமாகவும், மென்மையாகவும் பேசுபவன் பெரியோர்களின் மதிப்பை பெறுவான்.

* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியாது.

* தியானத்தின் மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டால் துன்பக்கடலை எளிதாகக் கடக்க முடியும்.

* தன்னைக் கொண்டு தன்னை வெல்பவனே இன்பம் பெறத் தகுதி படைத்தவன்.

* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுத்துக் கொள்பவனே அறிஞன்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us