Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதி எங்கே இருக்கிறது

நிம்மதி எங்கே இருக்கிறது

நிம்மதி எங்கே இருக்கிறது

நிம்மதி எங்கே இருக்கிறது

ADDED : ஜூன் 06, 2012 10:06 AM


Google News
Latest Tamil News
* உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.

* கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார்.

* எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், அது அழுக்குப்படியாத கண்ணாடி போல தூய்மையுடன் இருக்கும்.

* பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கும் நியாய தர்மங்களைப் பின்பற்றவேண்டும். முறை தவறிச்செய்யும் செயல்களால் கஷ்டம் தான் உண்டாகும்.

* செய்யும் தொழிலைக் கடனே என்று செய்வதால் ஒரு பயனுமில்லை. ஆர்வத்தோடும், மனப்பூர்வமாகவும் செய்வது அவசியம்.

* மற்றவர்களோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் போட்டி பொறாமை தான் உருவாகும். மனநிம்மதி உங்களுக்குள் தான் இருக்கிறது.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us