Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

ADDED : மே 31, 2012 11:05 AM


Google News
Latest Tamil News
* எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம்.

* நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது.

* எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி நிலைக்கும்.

* குழந்தைகளுக்கு கல்வி என்ற மருந்தை விட அடக்கம் என்ற பத்தியம் முக்கியம்.

* மனிதனிடம் ஒழுக்கம் நிலைபெற்றுவிட்டால், ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும் அழகும் மிளிரத் தொடங்கிவிடும்.

* மனமும், உடலும் எப்போதும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும். அப்போது தான் ஒருவன் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும்.

* துன்பம் யாருக்கு ஏற்பட்டாலும் வலிந்து சென்று நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்.

* நாம் எங்கே போனாலும் மகிழ்ச்சியை பரவச் செய்ய வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது முகத்தையும் பிரகாசிக்கச் செய்யும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us