ADDED : ஏப் 09, 2013 10:04 AM

* எந்தச் செயலையும் முறையோடு செய்ய வேண்டும். நியாயம் தவறும்போது தான் வாழ்வில் துன்பம் ஏற்படுகிறது.
* ஒருவருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு நியாயமாக தோன்றுவது இல்லை. எனவே எல்லோரும் ஏற்கும் விதத்தில் பொது நியாயத்தைப் பின்பற்றுவது நல்லது.
* பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்து வர வேண்டும்.
* சமூகத்திற்கு தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது இளைய சமுதாயத்திற்கு நல்ல தூண்டுகோலாக இருக்கும்.
* பணமும், பட்டமும், பதவியும் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அதை துறக்கும்போது ஏற்படும் அமைதி உயர்வானது.
* கல்வியின் பயன் மெய்ப்பொருளான கடவுளை அறிந்து கொள்வது தான். படித்தவர்கள், பக்தி இல்லாமல் இருப்பது பெருங்குறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்
* ஒருவருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு நியாயமாக தோன்றுவது இல்லை. எனவே எல்லோரும் ஏற்கும் விதத்தில் பொது நியாயத்தைப் பின்பற்றுவது நல்லது.
* பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்து வர வேண்டும்.
* சமூகத்திற்கு தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது இளைய சமுதாயத்திற்கு நல்ல தூண்டுகோலாக இருக்கும்.
* பணமும், பட்டமும், பதவியும் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அதை துறக்கும்போது ஏற்படும் அமைதி உயர்வானது.
* கல்வியின் பயன் மெய்ப்பொருளான கடவுளை அறிந்து கொள்வது தான். படித்தவர்கள், பக்தி இல்லாமல் இருப்பது பெருங்குறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்