Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/உழைப்பவனுக்கு உணவு உறுதி

உழைப்பவனுக்கு உணவு உறுதி

உழைப்பவனுக்கு உணவு உறுதி

உழைப்பவனுக்கு உணவு உறுதி

ADDED : ஜன 17, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
* வயலில் நெல்லை உற்பத்தி செய்ய கடுமையாகப் பாடுபட்டு, பிறர் சாப்பிட வழங்குவது போல், வாழ்க்கையில் நல்ல செயல்களை செய்து, இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

* துன்பம் நீங்க மனதை தூய்மையாகவும், சாந்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறந்ததிலிருந்து வாலிபப்பருவம் வரை தாயிடம் உணவை எதிர்பார்க்கலாம். அதன் பின் உழைப்பை நம்ப வேண்டும். உழைத்தால் இறைவன் தானாகவே உணவு அளிப்பான்.

* எந்த நாட்டில் பசுக்கள் நன்றாக செழிப்பாக இருக்கிறதோ, அந்த நாடு பசுவால் செழிப்படையும் என்பதால் சாஸ்திரங்கள் பசுவைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றன.

* ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கில் பணம் இருக்கலாம். ஆனால், அதைப் பிறருக்கு பயன்படுத்தாமல் இருந்தால், அது பாலைவனத்தில் உள்ள பயிருக்கு ஒப்பாகும்.

* சமைக்க பானையில் அரிசி போடும் போது பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us