Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை

ADDED : பிப் 09, 2024 11:02 AM


Google News
Latest Tamil News
* வெற்றி பகையை உருவாக்கும். தோல்வி வருத்தம் தரும். இவை இல்லாத மனதிலே அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.

* சுகபோகங்களில் இருந்து சோகம் பிறக்கிறது.

* பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை.

* உனது விடுதலை பிறரிடம் இல்லை. உன்னிடமே உள்ளது.

* அமைதியை விட மேலான ஆனந்தம் வேறில்லை.

* நீ துன்பப்பட்டாலும் பிறருக்கு தீமை செய்யாதே.

* நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி முடிவு செய்பவனே ஞானி.

* ஒருவன் உனக்கு கெடுதல் செய்கிறான் என்றால் உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம். அதை திருத்திக்கொள்.

* பஞ்சில் படியும் தீப்பொறியை விட மனதில் படியும் வெறுப்பு வேகமாகப் பரவும்.

* நீ செய்யும் செயல்கள் உன்னை நிழல் போல தொடரும்.

* பிறரது குற்றம் எளிதில் உனக்கு தெரியும். ஆனால் உன்னிடம் உள்ள குற்றத்தை நீ பார்க்க மாட்டாய்.

* ஆசைகளுக்கு சமமான நெருப்பு வேறில்லை.

* பயன் இல்லாத சொற்களை பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன்.

* தொடர்ந்து கடைபிடிக்கும் பொறுமையே உயர்ந்த தவம்.

* கோபத்தில் வரும் வார்த்தை கூரிய வாளுக்கு சமம்.

சொல்கிறார் புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us