Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/அன்பிருந்தால் அச்சமில்லை

அன்பிருந்தால் அச்சமில்லை

அன்பிருந்தால் அச்சமில்லை

அன்பிருந்தால் அச்சமில்லை

ADDED : ஜூன் 27, 2010 07:06 AM


Google News
Latest Tamil News
* அன்பு யாவருக்கும் நன்மை செய்யும். பொறாமை கொள்ளாது. தற்புகழ்ச்சி செய்யாது. இறுமாப்பு அடையாது.அன்புள்ளவருக்கு அச்சத்திற்கு இடமேயில்லை. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவாராக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.

* இளைஞர்களே! இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனக்கவலையை ஒழியுங்கள்.

உடலுக்கு ஊறுவராதபடி காத்துக் கொள்ளுங்கள்.

* ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக் கொள்வான். இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான். தந்தையையும், தாயையும் கொடுமைப்படுத்தும் மகன் வெட்கக்கேட்டையும்,

இழிவையும் வருவித்துக் கொள்வான்.

* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே, தமது திருவுள்ளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.

* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றாலே என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்கவேண்டும்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில்  ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us