Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/கோபத்தை விட்டு விடு!

கோபத்தை விட்டு விடு!

கோபத்தை விட்டு விடு!

கோபத்தை விட்டு விடு!

ADDED : ஜூலை 03, 2010 06:07 PM


Google News
Latest Tamil News
* தேவையுள்ளவன் என்றைக்குமே மறைக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.

* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது.

ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.

* கோபத்திலிருந்து நீங்கி, உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.

* தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகிப் பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.

* நடுகிறவனும் நீர் பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரிதான். ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவான்.

* பதுங்கிக் காத்திருப்பது தங்கள் சொந்த ரத்தத்திற்கே. ஒளிந்திருப்பது தங்கள் சொந்த உயிரை இழப்பதற்கே.

* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான். கொள்ளைக்காரனாயுமிருப்பான்.

-பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us