Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வலைப்படுவதால் ஏதும் நடக்காது

வலைப்படுவதால் ஏதும் நடக்காது

வலைப்படுவதால் ஏதும் நடக்காது

வலைப்படுவதால் ஏதும் நடக்காது

ADDED : மே 17, 2009 06:24 PM


Google News
Latest Tamil News
<P>* சத்தியம் ஒன்றே. அதை ஆராதனை செய்யும் வழிகள் பல உள்ளன. சத்தியத்தை மட்டுமே பூஜிக்கும் விரதம் மேற்கொள்பவர்கள் இறுதியில் ஆனந்தத்தையும் நிறைவை யும் அடைவர். <BR>* கொலையையும், கொள்ளையையும் அன்பினாலும், பிறருக்கு இரங்கும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடி வரக்கூடிய மாமருந்து. மற்றவை எல்லாம் போலியே. <BR>* குற்றம் செய்த மனிதனை சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாத அளவில் அறிவு நிலையிலும் ஒழுக்க நிலையிலும் மேம்படுத்த வழிவகை செய்யவே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த எண்ணத்துடன் தான் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். <BR>* குற்றம் புரிவதற்கு அடிப்படைக் காரணம் அறியா மையே. அந்த அறியாமையை போக்குவதற்கு நல்லவர் களின் சேர்க்கையும், மனோதிடமும் அவசியம். <BR>* கவலைப்படாமல் தைரியமாக இருந்தால் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. நோயோ, ஆபத்தோ நேர்ந்தாலும் அதற்காக கவலைப்படுவதை தவிர்த்தால் நோயும், கவலையும் விலகத் துவங்கி விடும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us