Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நன்மைக்கு...

நன்மைக்கு...

நன்மைக்கு...

நன்மைக்கு...

ADDED : மார் 15, 2024 11:43 AM


Google News
Latest Tamil News
ஒலிகள் அழிவதில்லை. அதாவது ஒலி உண்டான பின் அழியாமல் என்றும் ஆகாயத்தில் நிலைத்திருக்கும். வேத மந்திரங்கள் அனைத்தும் பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் உருவானவை.

ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் ஒலியின் மூலமே பிரபஞ்சத்தை தோற்றுவித்தார். அதாவது பிரம்மா தோன்றியதும் அவருடைய இதயத்தில் வேத ஒலிகள் தோன்றின. பூமியை உருவாக்க வேத ஒலிகளே அவருக்கு வழிகாட்டின. எங்கும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அறிந்து அவர் மகிழ்ந்தார். ரிஷிகளால் பெறப்பட்ட மந்திரங்களே நமக்கு கிடைத்த வேதமாகும். அவையே ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாகும். 'அனந்தா வை வேதா:' என்கிறது வேதவாக்கியம்.

அதாவது வேதங்களுக்கு அளவே இல்லை என்பது இதன் பொருள். இம்மை, மறுமையிலும் நலமுடன் வாழ வேத வழிபாடு ஒன்றே துணை. வேதம் சொல்பவர்களுக்கு உதவி செய்வதால் வாழ்வில் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us