ADDED : மார் 08, 2024 03:13 PM
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவனை பூஜித்து அருள் பெற்றுள்ளனர். ஆனால் தன்னைத் தானே பூஜை செய்து சிவன் வழிபட்ட தலம் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில். கருவறையில் சுவாமி சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி சிலைகள் உள்ளன.
மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்பவர் சிவபெருமானே. பாண்டிய மன்னர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். இதனடிப்படையில் பாண்டிய மன்னராக ஆட்சியில் அமர்ந்த சிவன்(சொக்கநாதர்) பட்டாபிஷேகத்தின் போது தனக்குத் தானே பூஜை செய்கிறார். இதற்காக ஆண்டு தோறும் ஆவணி மூலநட்சத்திரத்தன்று விழா நடக்கிறது.
மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்பவர் சிவபெருமானே. பாண்டிய மன்னர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். இதனடிப்படையில் பாண்டிய மன்னராக ஆட்சியில் அமர்ந்த சிவன்(சொக்கநாதர்) பட்டாபிஷேகத்தின் போது தனக்குத் தானே பூஜை செய்கிறார். இதற்காக ஆண்டு தோறும் ஆவணி மூலநட்சத்திரத்தன்று விழா நடக்கிறது.