
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். இந்த சேவையில் வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் ஆகியவற்றை தாளபாக்கம் அன்னமாச்சார்யா வம்சத்தினர் பாடுவர். அதன் பின் கீர்த்தனைகள் பாடுவர்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் பாடப்பட்ட சுப்ரபாதம் கேட்ட பின்னரே ஏழுமலையான் தினமும் கண் விழிப்பார். அப்போது பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யத்துடன் தீபாராதனை நடக்கும். இதனை நவநீத ஆரத்தி என்பர்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் பாடப்பட்ட சுப்ரபாதம் கேட்ட பின்னரே ஏழுமலையான் தினமும் கண் விழிப்பார். அப்போது பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யத்துடன் தீபாராதனை நடக்கும். இதனை நவநீத ஆரத்தி என்பர்.