Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/உள்ளம் என்னும் கோயிலிலே....

உள்ளம் என்னும் கோயிலிலே....

உள்ளம் என்னும் கோயிலிலே....

உள்ளம் என்னும் கோயிலிலே....

ADDED : டிச 20, 2019 03:30 PM


Google News
Latest Tamil News
டிச.25 - ராஜாஜி நினைவு நாள்

* கண் விழித்ததும், ''கடவுளே... என் உள்ளம் என்னும் கோயிலைத் துாய்மையுடன் இருக்கச் செய்'' என வழிபடுங்கள்.

* துாங்கும் முன்,'' இன்று செய்த குற்றங்கள் இன்றோடு போகட்டும். மறுபடியும் அதைச் செய்யாதிருக்க அருள்புரிவாய்'' என வேண்டுங்கள்.

* கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைக்க வேண்டாம். நமக்கு அருகிலேயே இருக்கிறார். இதனை மனதில் நினைத்தால் நிம்மதியாக வாழலாம்.

* கடவுளை தாயாகக் கருதி வழிபடுவது சிறப்பு. தந்தை, குழந்தை வடிவத்திலும் வழிபடலாம்.

* தியானம் செய்ய நிற்கவோ, அமரவோ வேண்டாம். படுத்த நிலையிலும் செய்யலாம். மனம் ஒருமுகப்பட்டு இருந்தாலே போதும்.

* பலனை எதிர்பார்த்து பக்தி செலுத்தக் கூடாது. பேராசை, ஆணவத்தில் இருந்து மனதை காப்பவனே பக்திமான்.

* பக்தி ஆழமானதாக இருந்தால், ஆசாரக்குறைவு நம்மைப் பாதிக்காது. கடவுள் மீதுள்ள பக்தி உண்மையானதா, ஆழமானதா என நம்மை நாமே பரிசோதிக்க வேண்டும்.

* உள்ளம் உருகி வழிபட்டால் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

* பிறரைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்.

* தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்பதில் அவமானம் ஏதுமில்லை.

வேண்டுகிறார் ராஜாஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us