Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : மே 09, 2020 05:48 PM


Google News
Latest Tamil News
* செம்பருத்தி பூவை உலர வைத்து பொடிசெய்து உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* செவ்வாய் கிழமையில் கடன் வாங்க கூடாது. அதே நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் நன்மை உண்டாகும்.

* தசமி, பவுர்ணமி திதிகள் கிரகப் பிரவேசத்திற்கு மிக சிறந்தவை.

* தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் ஞானவஞ்சகன்.

* வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் (10:30 - 12:00 மணி) சரபேஸ்வரரை வழிபட திருமணம், குழந்தை பேறு கிடைக்கும்.

* தேங்காயை தானம் செய்தால் பசுவைத் தானம் செய்த பலன் உண்டாகும்.

* கோயில் குளங்களில் உப்பைக் கரைத்தால் பாவம் அனைத்தும் கரைந்து போகும்.

* ஜாதகத்தில் குருபகவான் உச்சம், ஆட்சி பெற்று பலமாக இருந்தால் செய்வினை, பில்லி, சூனியம் நெருங்காது.

* நல்ல செயல்களை செய்யும் போது அதை தடுப்பது பெரும் குற்றம். பொய் சாட்சி சொல்பவர் நரகத்திற்குச் செல்வர்.

* 11,27,54 அல்லது 108 எண்ணிக்கையில் வெற்றிலைகள் கோர்த்த மாலையை செவ்வாயன்று விநாயகருக்கு சாத்த விருப்பம் நிறைவேறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us