Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜூலை 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்ற

ஆயகி கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

பொருள்: உலகின் தலைவியே! கலைமகளாகவும், அலைமகளாகவும் இருப்பவளே! பஞ்சபாணம் தாங்கியவளே! பார்வதியே! சம்ஹாரம் செய்பவளே! சிவபெருமானின் கழுத்தில் விஷத்தை நிறுத்தியவளே! மயக்கும் பேரழகு மிக்கவளே! சப்த மாதர்களில் வராகியாக

இருப்பவளே! சூலம் தாங்கியவளே! மதங்க முனிவரின் மகளே! பலவித திருநாமங்களால் போற்றப்படுபவளே! உன் திருவடி எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கட்டும்.

குறிப்பு: அபிராமி அந்தாதியிலுள்ள பாடல்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us