Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஜூன் 23, 2015 11:55 AM


Google News
Latest Tamil News
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்

சிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
.

பொருள்: கற்பனைக்கு எட்டாத ஜோதி வடிவானவரே! கருணை மிக்கவரே! அற்புத அழகு கொண்டவரே! அரிய வேதங்களால் தாங்கப்படுபவரே! சிற்றம்பலமாகிய தில்லையில் வீற்றிருப்பவரே! பொன்னம்பலத்தில் நடனம் புரிபவரே! உமது மலர்ப் பாதத்தை போற்றி வணங்குகிறேன்.

குறிப்பு: சேக்கிழாரின் பெரியபுராணத்தில் உள்ள பாடல்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us