Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : நவ 19, 2014 12:09 PM


Google News
Latest Tamil News
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

பொருள்: சிவபெருமானே! நீயே விண்ணாகவும், மண்ணாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலா கவும், உயிராகவும் இருக்கிறாய். உண்மையாகவும், இல்லாதவனாகவும் விளங்குகிறாய். நீயே உலகத்திற்கு தலைவனாக இருக்கிறாய். அது மட்டுமில்லாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் நான், எனது என்ற அகப்பற்றையும் புறப்பற்றையும் தந்து கூத்தாட்டுபவனாகவும் இருக்கிறாய். அப்படிப்பட்ட அருமை பெருமைகளை உடைய உன்னை என்ன சொல்லி வாழ்த்துவதென்றே எனக்கு புரியவில்லை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us