Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஏப் 17, 2020 12:11 PM


Google News
Latest Tamil News
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை ஐங்கணையும் பாசாங்குசமும் கரும்பு வில்லும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே

பொருள்: உயிர்களின் தாயாக விளங்கும் அபிராம வல்லியே! அண்ட சராசரங்களில் எல்லாம் திகழ்பவளே! மாதுளம்பூ போன்று சிவந்தவளே! பூவுலகைக் காப்பவளே! கரும்பு வில்லும், மலர் அம்பும், பாசாங்குசமும் ஏந்தி நிற்பவளே! மூன்று கண்களை உடையவளே! உன்னை வணங்குவோருக்கு ஒரு தீங்கும் உண்டாகாது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us