ADDED : ஏப் 26, 2019 03:02 PM
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த
வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!
(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)
பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!
ஆணிப் பொன்னால் செய்த
வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!
(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)
பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!


