ADDED : ஏப் 19, 2019 02:51 PM

வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(சுந்தரர் பாடிய பாடல்)
பொருள்: வெண்மையான திருநீறு பூசிய மேனியனே! கருநீலமான கழுத்தை உடையவனே! சிவந்த ஜடாபாரம் கொண்டவனே! பிரம்மனின் தலையைக் கொய்தவனே! பண்பில் சிறந்த அந்தணர்கள் வேதம் ஓதி வணங்கும் நன்னிலம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.
பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(சுந்தரர் பாடிய பாடல்)
பொருள்: வெண்மையான திருநீறு பூசிய மேனியனே! கருநீலமான கழுத்தை உடையவனே! சிவந்த ஜடாபாரம் கொண்டவனே! பிரம்மனின் தலையைக் கொய்தவனே! பண்பில் சிறந்த அந்தணர்கள் வேதம் ஓதி வணங்கும் நன்னிலம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.


