Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

ADDED : டிச 06, 2019 10:42 AM


Google News
Latest Tamil News
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

எம்பொன் ஈசன் இறைவனென்று உள்குவார்க்கு

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

பொருள்: துன்பம், துயரம் ஏதும் அணுகாமல் இன்பமாக வாழ விரும்பினால், இரவும் பகலும் சிவனை வணங்குங்கள். ''பொன்னிறம் கொண்ட ஈசனே! இறைவனே!' என உள்ளம் உருகுங்கள். திருவானைக்காவலில் வீற்றிருக்கும் தலைவனாகிய சிவபெருமானின் அன்பராக மாறுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us