ADDED : ஆக 25, 2023 10:12 AM

எம்.வைத்தியநாதன், ஆண்டிபட்டி, தேனி.
*மறைந்தவரைத் தவிர பிறரை குருவாக ஏற்க மனம் மறுக்கிறது. என்ன செய்யலாம்?
நீங்கள் விரும்பும் குருநாதர் படத்தின் முன் தினமும் தியானம் செய்யுங்கள். உங்களை அவர் வழிநடத்துவார்.
எம்.அருணா, பாபநாசம், திருநெல்வேலி.
*வீட்டில் வளரும் துளசியில் மாலை கட்டி பெருமாளுக்கு சாத்தலாமா?
சாத்தலாம். வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது.
வி.கமலம், மேல்மலையனுார், விழுப்புரம்.
*புதிய கோயில் கட்டுவது அல்லது பழைய கோயிலை புதுப்பிப்பது - எது சிறந்தது?
பழைய கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவது நல்லது. பழைய கோயில்களை கவனிக்காமல் புதிய கோயில் கட்டுவதால் என்ன பயன்?
கே.நந்தினி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
*சில கோயில்களில் எட்டுக்கைகளுடன் அம்மன் இருக்கிறதே...
இந்த அம்மனின் பெயர் ஜெயதுர்கை. இவளை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.
ஆர்.கண்ணன், ராமமூர்த்திநகர், பெங்களூரு.
*பிச்சை கேட்பவர்களில் பலர் வசதியானவர்களாக இருக்கிறார்களே….
பிச்சை எடுப்பதே தவறு. இவர்களால்தான் நம் நாட்டின் மானம் பறி போகிறது.
எல்.ஸ்ரீதர், மாம்பலம், சென்னை
*ஆசிரியரும் குருநாதரும் ஒருவரா...
பாடம் நடத்துபவர் ஆசிரியர். ஆன்மிக விஷயங்களை உபதேசிப்பவர் குருநாதர்.
சி.ஆர்த்தி, துவாரகா, டில்லி.
*சுவாமிக்கு சாற்றும் எலுமிச்சை மாலையில் எத்தனை பழங்கள் இருக்க வேண்டும்?
27, 54, 108 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
டி.பூபதி, அனந்தமங்கலம், செங்கல்பட்டு.
*கோயிலை துாய்மை செய்யும் உழவாரப்பணியால் கிடைக்கும் நன்மை...
இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வரும். அதில் வெற்றி பெற்ற மனஉறுதி வேண்டும். இதைத் தருவது உழவாரப்பணி.
எஸ்.பகவதி, தேவகோட்டை, சிவகங்கை.
*சுவாமிக்குரிய வஸ்திரங்களை வீட்டில் துவைத்து கோயிலுக்கு கொடுக்கலாமா?
கொடுக்கலாம். இதை தனியாக துவைத்து கொடுங்கள். இது புண்ணிய செயல்.
ஆர்.மாணிக்கவேல், அவிநாசி, திருப்பூர்.
*மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் முக்தி அடையுமா?
முக்தி அடையும். பல பிறவிகளில் செய்த புண்ணியத்தால் விலங்காக பிறந்தாலும், பக்தியுடன் இருந்தால் முக்தி கிடைக்கும். உதாரணமாக பசு சிவபெருமானை பூஜித்த ஊர் திருஆவடுதுறை.
மயில் - மயிலாடுதுறை.
*மறைந்தவரைத் தவிர பிறரை குருவாக ஏற்க மனம் மறுக்கிறது. என்ன செய்யலாம்?
நீங்கள் விரும்பும் குருநாதர் படத்தின் முன் தினமும் தியானம் செய்யுங்கள். உங்களை அவர் வழிநடத்துவார்.
எம்.அருணா, பாபநாசம், திருநெல்வேலி.
*வீட்டில் வளரும் துளசியில் மாலை கட்டி பெருமாளுக்கு சாத்தலாமா?
சாத்தலாம். வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது.
வி.கமலம், மேல்மலையனுார், விழுப்புரம்.
*புதிய கோயில் கட்டுவது அல்லது பழைய கோயிலை புதுப்பிப்பது - எது சிறந்தது?
பழைய கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவது நல்லது. பழைய கோயில்களை கவனிக்காமல் புதிய கோயில் கட்டுவதால் என்ன பயன்?
கே.நந்தினி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
*சில கோயில்களில் எட்டுக்கைகளுடன் அம்மன் இருக்கிறதே...
இந்த அம்மனின் பெயர் ஜெயதுர்கை. இவளை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.
ஆர்.கண்ணன், ராமமூர்த்திநகர், பெங்களூரு.
*பிச்சை கேட்பவர்களில் பலர் வசதியானவர்களாக இருக்கிறார்களே….
பிச்சை எடுப்பதே தவறு. இவர்களால்தான் நம் நாட்டின் மானம் பறி போகிறது.
எல்.ஸ்ரீதர், மாம்பலம், சென்னை
*ஆசிரியரும் குருநாதரும் ஒருவரா...
பாடம் நடத்துபவர் ஆசிரியர். ஆன்மிக விஷயங்களை உபதேசிப்பவர் குருநாதர்.
சி.ஆர்த்தி, துவாரகா, டில்லி.
*சுவாமிக்கு சாற்றும் எலுமிச்சை மாலையில் எத்தனை பழங்கள் இருக்க வேண்டும்?
27, 54, 108 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
டி.பூபதி, அனந்தமங்கலம், செங்கல்பட்டு.
*கோயிலை துாய்மை செய்யும் உழவாரப்பணியால் கிடைக்கும் நன்மை...
இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வரும். அதில் வெற்றி பெற்ற மனஉறுதி வேண்டும். இதைத் தருவது உழவாரப்பணி.
எஸ்.பகவதி, தேவகோட்டை, சிவகங்கை.
*சுவாமிக்குரிய வஸ்திரங்களை வீட்டில் துவைத்து கோயிலுக்கு கொடுக்கலாமா?
கொடுக்கலாம். இதை தனியாக துவைத்து கொடுங்கள். இது புண்ணிய செயல்.
ஆர்.மாணிக்கவேல், அவிநாசி, திருப்பூர்.
*மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் முக்தி அடையுமா?
முக்தி அடையும். பல பிறவிகளில் செய்த புண்ணியத்தால் விலங்காக பிறந்தாலும், பக்தியுடன் இருந்தால் முக்தி கிடைக்கும். உதாரணமாக பசு சிவபெருமானை பூஜித்த ஊர் திருஆவடுதுறை.
மயில் - மயிலாடுதுறை.


