ADDED : ஜூலை 12, 2024 08:00 AM

ரா.சாரதா, ஜன்பத், டில்லி.
* முன்னோர் சாபம் என்றால்...
முன்னோருக்கான சடங்கு, தர்ப்பணம், திதியைக் கொடுக்காவிட்டால் சந்ததியைப் பாதிக்கும். இதுவே முன்னோர் சாபம்.
ர.ராஜா, பந்தலுார், நீலகிரி.
*பல வாகனங்களில் சுவாமி வலம் வருகிறாரே...
எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பா.குமாரசுவாமி, நல்லாத்துார், கடலுார்.
*காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?
ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு இடையே மற்ற கிரகங்கள் இருப்பது காலசர்ப்ப தோஷம். இதற்கு கோயிலில் பரிகாரம் செய்யுங்கள்.
ம.பார்க்கவி, திப்பசந்திரா, பெங்களூரு.
*பதவி உயர்வு பெற....
அனுமனுக்கு சனிக்கிழமையன்று துளசி அர்ச்சனை செய்து, வடைமாலை சாத்துங்கள்.
வி.சித்ரா, பரமக்குடி, ராமநாதபுரம்.
*ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்களே...
ஒருவரின் ராசிக்கு ஒன்பதில் குரு வந்தால் துன்பம் விலகும். கஷ்டமான சூழலில் இருந்து தப்பும் போது இப்படிச் சொல்வர்.
பா.மங்கை, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.
*தேங்காயை சிதறுகாயாக உடைப்பது ஏன்?
தேங்காயை உடைக்கும் போது அது நான்கு பக்கமும் சிதறும். அதுபோலவே தடைகள் விலக இதைச் செய்கிறோம்.
இ.ராசுக்குட்டி, வண்டலுார், செங்கல்பட்டு.
*இலையில் எப்படி பரிமாற வேண்டும்?
இனிப்பு, காய்கறி, சாதம் என இலையில் பரிமாற வேண்டும்.
த.பரமேஸ்வரன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்.
*சுபநிகழ்ச்சியில் கொடுத்த வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
பயன்படுத்தக் கூடாது. மரியாதை, கவுரவம் கருதி இதை கொடுக்கின்றனர்.
க.முருகராஜ், நாகர்கோவில், கன்னியாகுமரி.
*நவக்கிரக யாகத்தில் வெவ்வேறு நிறத்தில் வஸ்திரம் வைப்பது ஏன்?
ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்தில் இருப்பதால் பல நிறங்களில் வஸ்திரம் வைத்து பூஜிக்கிறோம்.
அ.புகழேந்தி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி.
*கண்ணாத்தாள், திரவுபதி -ஒரே பெண் தெய்வமா?
இல்லை. காளியின் அம்சம் கண்ணாத்தாள். பாண்டவரின் மனைவி திரவுபதி.
* முன்னோர் சாபம் என்றால்...
முன்னோருக்கான சடங்கு, தர்ப்பணம், திதியைக் கொடுக்காவிட்டால் சந்ததியைப் பாதிக்கும். இதுவே முன்னோர் சாபம்.
ர.ராஜா, பந்தலுார், நீலகிரி.
*பல வாகனங்களில் சுவாமி வலம் வருகிறாரே...
எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பா.குமாரசுவாமி, நல்லாத்துார், கடலுார்.
*காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?
ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு இடையே மற்ற கிரகங்கள் இருப்பது காலசர்ப்ப தோஷம். இதற்கு கோயிலில் பரிகாரம் செய்யுங்கள்.
ம.பார்க்கவி, திப்பசந்திரா, பெங்களூரு.
*பதவி உயர்வு பெற....
அனுமனுக்கு சனிக்கிழமையன்று துளசி அர்ச்சனை செய்து, வடைமாலை சாத்துங்கள்.
வி.சித்ரா, பரமக்குடி, ராமநாதபுரம்.
*ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்களே...
ஒருவரின் ராசிக்கு ஒன்பதில் குரு வந்தால் துன்பம் விலகும். கஷ்டமான சூழலில் இருந்து தப்பும் போது இப்படிச் சொல்வர்.
பா.மங்கை, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.
*தேங்காயை சிதறுகாயாக உடைப்பது ஏன்?
தேங்காயை உடைக்கும் போது அது நான்கு பக்கமும் சிதறும். அதுபோலவே தடைகள் விலக இதைச் செய்கிறோம்.
இ.ராசுக்குட்டி, வண்டலுார், செங்கல்பட்டு.
*இலையில் எப்படி பரிமாற வேண்டும்?
இனிப்பு, காய்கறி, சாதம் என இலையில் பரிமாற வேண்டும்.
த.பரமேஸ்வரன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்.
*சுபநிகழ்ச்சியில் கொடுத்த வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
பயன்படுத்தக் கூடாது. மரியாதை, கவுரவம் கருதி இதை கொடுக்கின்றனர்.
க.முருகராஜ், நாகர்கோவில், கன்னியாகுமரி.
*நவக்கிரக யாகத்தில் வெவ்வேறு நிறத்தில் வஸ்திரம் வைப்பது ஏன்?
ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்தில் இருப்பதால் பல நிறங்களில் வஸ்திரம் வைத்து பூஜிக்கிறோம்.
அ.புகழேந்தி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி.
*கண்ணாத்தாள், திரவுபதி -ஒரே பெண் தெய்வமா?
இல்லை. காளியின் அம்சம் கண்ணாத்தாள். பாண்டவரின் மனைவி திரவுபதி.