ADDED : ஜூன் 21, 2024 12:36 PM

குமார், சிவகங்கை.
*உழைப்பின்றி சேர்த்த பணம்....
உழைப்பால் கிடைத்த பணம் நிற்கும். உழைக்காமல் வந்த பணம் வந்த வேகத்தில் மறையும்.
எம்.சண்முகப்பிரியா, குழித்துறை, கன்னியாகுமரி.
*முக்கனிகளால் அபிஷேகம் செய்வது ஏன்?
மா, பலா, வாழை. இவை மூன்றும் சிறந்தவை என்பதால் அபிஷேகம் செய்கிறோம்
கே.பாலச்சந்தர், பாரிமுனை, சென்னை.
*தலவிருட்சத்தில் என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?
தலவிருட்சத்தை வழிபட்டால் போதும். பொம்மை, தொட்டில், துணியால் முடிச்சிடுவது, நுாலைச் சுற்றுவது கூடாது.
சி.சந்தோஷ், மதுக்கரை, கோயம்புத்துார்.
*திருமணம், அன்னதானத்தில் உணவு வீணாகிறதே...
உணவை வீணாக்குவது பாவம். தேவைக்கேற்ப உணவு தயாரியுங்கள்.
சி.சாய்சரண், ஏரோசிட்டி, டில்லி.
*பெருநெறி என்றால் என்ன?
எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி. ஆனால் நாம் மதம், ஜாதி, மொழி என குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறோம்.
கே.மாலதி, மேகமலை, தேனி.
*48 நாள் விரதத்தில் அசைவம் சாப்பிடலாமா...
பாவம் போக்குவதே விரதம். அச்சமயம் அசைவம் சாப்பிடுவது கூடாது. மீண்டும் 48 நாள் விரதம் இருங்கள்.
எஸ்.புவனேஸ்வரி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.
*உறுப்பு தானத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறதா?
அனுமதிக்கிறது. ஒருவர் தன் உறுப்பை மற்றொருவர் பயன்படுத்தும் விதத்தில் தானம் அளிப்பது சிறந்த பண்பு. தாராளமாக கொடுங்கள்.
ஆர்.ஆனந்தி, சன்யாசிகுப்பம், புதுச்சேரி.
*கவலையில் இருந்து மீள வழியுண்டா?
உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடையுங்கள். கவலை வராது.
ஆர்.அபிதா, புவனகிரி, கடலுார்.
*எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?
காலையில் அரை மணி நேரம் மவுனமாக இருங்கள். செவ்வாய், வெள்ளி, பிரதோஷ நாட்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.
எம்.கே.மகாலட்சுமி, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.
*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?
கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. அதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.
*உழைப்பின்றி சேர்த்த பணம்....
உழைப்பால் கிடைத்த பணம் நிற்கும். உழைக்காமல் வந்த பணம் வந்த வேகத்தில் மறையும்.
எம்.சண்முகப்பிரியா, குழித்துறை, கன்னியாகுமரி.
*முக்கனிகளால் அபிஷேகம் செய்வது ஏன்?
மா, பலா, வாழை. இவை மூன்றும் சிறந்தவை என்பதால் அபிஷேகம் செய்கிறோம்
கே.பாலச்சந்தர், பாரிமுனை, சென்னை.
*தலவிருட்சத்தில் என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?
தலவிருட்சத்தை வழிபட்டால் போதும். பொம்மை, தொட்டில், துணியால் முடிச்சிடுவது, நுாலைச் சுற்றுவது கூடாது.
சி.சந்தோஷ், மதுக்கரை, கோயம்புத்துார்.
*திருமணம், அன்னதானத்தில் உணவு வீணாகிறதே...
உணவை வீணாக்குவது பாவம். தேவைக்கேற்ப உணவு தயாரியுங்கள்.
சி.சாய்சரண், ஏரோசிட்டி, டில்லி.
*பெருநெறி என்றால் என்ன?
எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி. ஆனால் நாம் மதம், ஜாதி, மொழி என குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறோம்.
கே.மாலதி, மேகமலை, தேனி.
*48 நாள் விரதத்தில் அசைவம் சாப்பிடலாமா...
பாவம் போக்குவதே விரதம். அச்சமயம் அசைவம் சாப்பிடுவது கூடாது. மீண்டும் 48 நாள் விரதம் இருங்கள்.
எஸ்.புவனேஸ்வரி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.
*உறுப்பு தானத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறதா?
அனுமதிக்கிறது. ஒருவர் தன் உறுப்பை மற்றொருவர் பயன்படுத்தும் விதத்தில் தானம் அளிப்பது சிறந்த பண்பு. தாராளமாக கொடுங்கள்.
ஆர்.ஆனந்தி, சன்யாசிகுப்பம், புதுச்சேரி.
*கவலையில் இருந்து மீள வழியுண்டா?
உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடையுங்கள். கவலை வராது.
ஆர்.அபிதா, புவனகிரி, கடலுார்.
*எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?
காலையில் அரை மணி நேரம் மவுனமாக இருங்கள். செவ்வாய், வெள்ளி, பிரதோஷ நாட்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.
எம்.கே.மகாலட்சுமி, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.
*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?
கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. அதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.