Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஜூன் 14, 2024 01:03 PM


Google News
Latest Tamil News
* திருச்சியில் அருள்புரியும் சிவனின் திருநாமம் தாயுமானசுவாமி. இவருக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்றும் பெயருண்டு.

* பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக இருப்பது காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்தியப்பர், அம்மன் ஞானப்பூங்கோதை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகார பூஜை செய்வர்.

* பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை திருமந்திரம். இதை இயற்றியவர் திருமூலர்.

* மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

* முருகப்பெருமானின் வரலாறான கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

* பெருமாள் மீது ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம். இதை தொகுத்தவர் நாதமுனிகள்.

* கண்ணன் மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

* சிவபக்தரான ராஜராஜச் சோழன் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். இவருக்கு சிவபாதசேகரன் என்னும் சிறப்பு பெயருண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us