ADDED : மே 24, 2024 07:43 AM

*கோயிலில் அபிஷேகத்தின் போது திரையிடுவதில்லையே...
எம்.கோமதி, புழுதிவாக்கம், சென்னை.
முதலில் சுவாமியின் திருமேனியை மறைத்து வஸ்திரம் சாத்துவதால், திரையிட வேண்டிய அவசியம் இல்லை. இதன் பின்னரே அபிஷேகம் நடக்கிறது.
*தண்ணீரால் நம் மனதின் சக்தி அதிகரிக்குமா?
வி.அனந்தராமன், கோவில்பட்டி, துாத்துக்குடி.
ஆம். தெய்வீக சக்தி கொண்ட தண்ணீரால் பாவம் நீங்குவதோடு மனதின் சக்தியும் அதிகரிக்கிறது.
*வைராக்கியம் என்றால் என்ன?
எம்.வனிதா, கிணத்துக்கடவு, கோயம்புத்துார்.
வி+ராகம் = வைராக்கியம்; வி - மேலான; ராகம் - விருப்பம். குறிக்கோளை (மேலான விருப்பத்தை) அடையும் வரை மற்ற ஆசைகளை பின்னுக்குத் தள்ளுங்கள்.
*கோயிலில் செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன?
எம்.சுதர்சன், சிதம்பரம், கடலுார்
உரக்கப் பேசுதல், பலமாகச் சிரித்தல், சாப்பிடுதல், துாங்குதல், அசுத்தப்படுத்துதல் ஆகியவை கூடாது.
*தினசரி வாழ்வில் கடவுளை நினைப்பது எப்படி?
கே.ரமா, மேலுார், மதுரை.
கடவுளை வழிபடவே பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு வேண்டும். அதிகாலையில் எழுதல், ஆசனம், மூச்சுப்பயிற்சி, குளியல், வழிபாடு, உணவு, கடமையாற்றுதல் என செயல்படுங்கள். மேலும் கடவுளின் திருநாமத்தை மனதிற்குள் உச்சரித்தபடி இருங்கள்.
*உழைத்து சம்பாதித்தும் கையில் பணம் தங்கவில்லையே...
வி.மயூரி, அடகூர், மைசூரு.
சரியான திட்டமிடுதல் அவசியம். கைக்கு பணம் வந்ததும் செலவழித்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது. வருமானத்திற்கேற்ப தேவையைக் குறையுங்கள்.
*பிறந்த நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?
பி.பர்வதம், திசையன்விளை, கன்னியாகுமரி.
பெரியோரை வணங்குதல், கோயிலில் வழிபடுதல், ஏழைகளுக்கு உதவி செய்யலாம். இதனால் ஆயுளும் அதிகரிக்கும்.
*உடல்நலத்துடன் வாழ ...
எஸ்.பிரபாவதி, உத்தமபாளையம், தேனி.
மனஇறுக்கம், படபடப்பு, கோபத்தை தவிருங்கள். சத்தான உணவை உண்ணுங்கள். தினமும் வழிபாடு செய்யுங்கள்.
*பகவத் கீதையை ஒரு வரியில் சொல்லுங்கள்.
ஆர்.வித்யா, கண்டமங்கலம், புதுச்சேரி.
கடவுளைச் சரணடை; கடமையைச் செய்; பலன் கிடைக்கும்.
*விதி என்றால் என்ன?
எம்.அனிதா, கரோல்பார்க், டில்லி.
இப்படித்தான் இதைச் செய்ய வேண்டும் என வரையறுக்கும் சட்டம் தான் விதி.
எம்.கோமதி, புழுதிவாக்கம், சென்னை.
முதலில் சுவாமியின் திருமேனியை மறைத்து வஸ்திரம் சாத்துவதால், திரையிட வேண்டிய அவசியம் இல்லை. இதன் பின்னரே அபிஷேகம் நடக்கிறது.
*தண்ணீரால் நம் மனதின் சக்தி அதிகரிக்குமா?
வி.அனந்தராமன், கோவில்பட்டி, துாத்துக்குடி.
ஆம். தெய்வீக சக்தி கொண்ட தண்ணீரால் பாவம் நீங்குவதோடு மனதின் சக்தியும் அதிகரிக்கிறது.
*வைராக்கியம் என்றால் என்ன?
எம்.வனிதா, கிணத்துக்கடவு, கோயம்புத்துார்.
வி+ராகம் = வைராக்கியம்; வி - மேலான; ராகம் - விருப்பம். குறிக்கோளை (மேலான விருப்பத்தை) அடையும் வரை மற்ற ஆசைகளை பின்னுக்குத் தள்ளுங்கள்.
*கோயிலில் செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன?
எம்.சுதர்சன், சிதம்பரம், கடலுார்
உரக்கப் பேசுதல், பலமாகச் சிரித்தல், சாப்பிடுதல், துாங்குதல், அசுத்தப்படுத்துதல் ஆகியவை கூடாது.
*தினசரி வாழ்வில் கடவுளை நினைப்பது எப்படி?
கே.ரமா, மேலுார், மதுரை.
கடவுளை வழிபடவே பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு வேண்டும். அதிகாலையில் எழுதல், ஆசனம், மூச்சுப்பயிற்சி, குளியல், வழிபாடு, உணவு, கடமையாற்றுதல் என செயல்படுங்கள். மேலும் கடவுளின் திருநாமத்தை மனதிற்குள் உச்சரித்தபடி இருங்கள்.
*உழைத்து சம்பாதித்தும் கையில் பணம் தங்கவில்லையே...
வி.மயூரி, அடகூர், மைசூரு.
சரியான திட்டமிடுதல் அவசியம். கைக்கு பணம் வந்ததும் செலவழித்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது. வருமானத்திற்கேற்ப தேவையைக் குறையுங்கள்.
*பிறந்த நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?
பி.பர்வதம், திசையன்விளை, கன்னியாகுமரி.
பெரியோரை வணங்குதல், கோயிலில் வழிபடுதல், ஏழைகளுக்கு உதவி செய்யலாம். இதனால் ஆயுளும் அதிகரிக்கும்.
*உடல்நலத்துடன் வாழ ...
எஸ்.பிரபாவதி, உத்தமபாளையம், தேனி.
மனஇறுக்கம், படபடப்பு, கோபத்தை தவிருங்கள். சத்தான உணவை உண்ணுங்கள். தினமும் வழிபாடு செய்யுங்கள்.
*பகவத் கீதையை ஒரு வரியில் சொல்லுங்கள்.
ஆர்.வித்யா, கண்டமங்கலம், புதுச்சேரி.
கடவுளைச் சரணடை; கடமையைச் செய்; பலன் கிடைக்கும்.
*விதி என்றால் என்ன?
எம்.அனிதா, கரோல்பார்க், டில்லி.
இப்படித்தான் இதைச் செய்ய வேண்டும் என வரையறுக்கும் சட்டம் தான் விதி.