Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : மே 17, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
*நோயின்றி வாழ...

எம்.கதிர்வேல், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|

ஜபேந்நாமத்ரயம் நித்யம் சர்வரோக நிவாரணம்||

நோயின்றி வாழ இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி திருநீறு பூசுங்கள்.

*அனுக்ஞை விநாயகர் என்றால்...

எம்.சிந்துஜா, கண்டமங்கலம், புதுச்சேரி.

அனுக்ஞை என்றால் அனுமதி பெறுதல். யாகம், ஹோமம், திருவிழா கோயிலில் நடக்கும் முன் இவரிடம் அனுமதி பெறுவர்.

*ஸரிகமபதநி என்றால் என்ன?

வி.சங்கர்,கோவில்பட்டி, துாத்துக்குடி.

ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழும் சப்த ஸ்வரங்கள். இவற்றின் முதல் எழுத்துக்களே 'ஸரிகமபதநி'. இதுவே இசைக்கு ஆதாரம்.

*நம்பிக்கை துரோகியை சந்திக்க நேர்ந்தால்...

ஆர்.கோமதி, பெரும்பாக்கம், சென்னை.

புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள். அவரைக் கடவுள் கவனித்துக் கொள்வார்.

*குரோதி ஆண்டின் பலன் மோசமானதா?

எஸ்.பாலவிநாயகம், அருவங்காடு, நீலகிரி.

குரோதி என்ற பெயரைக் கண்டு பயப்படாதீர்கள். இந்த ஆண்டின் ராஜா செவ்வாய். அவருக்குரிய கடவுளான முருகனை வழிபட்டால் நன்மை சேரும்.

*மாசிக் கயிறு பாசி படியும் என்கிறார்களே...

எம்.வனஜா, பசுமலை, மதுரை.

எமனிடம் இருந்து கணவரைக் காத்தவள் சாவித்ரி. மாசி, பங்குனி இணையும் நேரத்தில் இவளை நினைத்து நோன்புக்கயிறு கட்டினால் சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். இதை விளக்குகிறது இந்த பழமொழி.

*பயணிகள் இளைப்பாற நிழற்குடை அமைப்பது புண்ணியமா...

பி.ரோகித், திருவட்டாறு, கன்னியாகுமரி.

புண்ணியம். ஆனாலும் உங்கள் பெயரை அதில் விளம்பரம் செய்யாதீர். நிழற்குடை அமைத்தால் நெருப்பு, உஷ்ணம் தொடர்பான தீமை உங்களுக்கு வராது.

*ராம நாம ஜபத்தில் பிரணவ மந்திரமான 'ஓம்' சேர்ப்பதில்லையே...

கே.ஸ்ரீராம், சின்னமனுார், தேனி.

ராம என ஜபித்தால் போதும். பிரணவ மந்திரம் இதில் அடங்கியுள்ளது.

*திருமணத்தை 'கால்கட்டு' என்பது ஏன்?

எம்.பிரீதி, அடகூர், மைசூரு.

திருமண பந்தம் மனிதனை பொறுப்பானவனாக மாற்றும். மனப்பக்குவத்தை தரும். இதையே கால்கட்டு என்கின்றனர்.

*பாலாலயம் செய்த கோயிலில் திருவிழா நடத்தலாமா?

ஆர்.கற்பகம், நொய்டா, டில்லி.

அந்தந்த கோயிலில் முன்னோர் வகுத்த நடைமுறையை பின்பற்றுங்கள். சில கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கு முன்பும் திருவிழா நடத்துவது உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us