Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : நவ 21, 2024 01:26 PM


Google News
Latest Tamil News
எஸ்.மணிகண்டன், புளியரை, தென்காசி.:*ஐயப்ப பக்தர்கள் எந்த நிற ஆடை உடுத்த வேண்டும்?

நீலம், காவியை தவிர வேறு நிற ஆடை உடுத்தக் கூடாது.

எம்.சீனிவாசன், திருவந்திபுரம், கடலுார்: *துன்பத்தை ஏற்கும் பக்குவம் ராமருக்கு எப்படி வந்தது?

தவ வாழ்வு வாழ்ந்ததால் துன்பத்தை ஏற்கும் பக்குவம் ராமருக்கு இருந்தது.

இ.சங்கரன், தோவாளை, கன்னியாகுமரி: *திருக்கச்சி நம்பி பற்றி சொல்லுங்கள்...

ராமானுஜரின் குருநாதரான இவர், காஞ்சி வரதராஜப்பெருமாளுடன் நேரடியாக பேசியவர்.

கே.சுபாஷினி, குன்னுார், நீலகிரி: *குடும்ப மகிழ்ச்சிக்கு...

தேவாரத் தலங்களை தரிசியுங்கள். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும்.

ஆர்.அமராவதி, திருத்தணி, திருவள்ளூர்: *பிறந்த ராசிக்கு ஏற்ப குணம் அமையுமா?

ஆம். அந்தந்த ராசிக்கான கிரகத்தைப் பொறுத்து குணம் அமையும்.

பி.மிருளாயினி, ஆண்டிபட்டி, தேனி: *பிறந்த தேதியை வைத்து பலன் சொல்வது சரிதானா...

ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு கிரகம் உரியது. அதன்படி பிறந்த தேதியை வைத்து பலன் கூறுவது எண்ஜோதிடம்.



எம்.கார்த்திகா, ஜூஜூவாடி, பெங்களூரு: *ஆதித்ய ஹ்ருதயம் படித்தால்...

நோய்கள் தீரும். கண்பார்வை குறைபாடு நீங்கும்.

ஏ.கயற்கண்ணி, பசுமலை, மதுரை: *கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதாமே... ஏன்?

கருவில் உள்ள குழந்தைக்கு கிரகண தோஷம், உடல் பாதிப்பு ஏற்படும் என்பதால்.

டி.பவதாரிணி, மந்திஹவுஸ், டில்லி:*இசையில் சிறக்க யாரை வழிபடலாம்?

அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us